திரு கந்தையா சிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ( WTBF) , உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை ( WTCF) ஆகியவற்றின் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் (சிங்கம் அண்ணா ) அவர்களது நூல் வெளியீட்டு நிகழ்வு தாயகத்தின் வவுனியா  ( 29/01/2022 )மற்றும் யாழ்ப்பாணம்   ( 30/01/2022 )ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது .

விளையாட்டுத்துறை சார்ந்த மிகப்பெரும் ஆர்வலரான திரு கந்தையா சிங்கம் அவர்கள்;  இத்துறை சார்ந்து ,நம்மவர்கள் உரிய நியமங்களில் பயின்று, உலகத்தரத்தில்  மிளிர்ந்திட வேண்டும் எனும் நோக்கில், பரந்து வாழும் நம்மவர்களை இணைத்து,  மிகப்பெரும் சவால்களையெல்லாம் சந்தித்து; உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவை( WTBF)  உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை ( WTCF )என்ற இரு பெரும் விளையாட்டு அமைப்புகளை உருவாக்கி வழிநடாத்திவருகின்றார். இதே போன்று உலகத் தமிழ் புகைப்பட கலைஞர்கள் பேரவை என்ற   ( WTPF )அமைப்பினையும் உருவாக்கியவர்.

தனிமனிதனாக தனது சிந்தனையில் தோன்றியதை  உருவாக்கி அத்துறைகளில் பயணிக்கும் பொருத்தமானவர்களை உள்வாங்கிஅவர்களோடு இணைந்து நிர்வாக கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிஇயங்கி வருகின்றமைக்கு அடித்தளமிட்டது முதல் அனைத்து விடயங்களிற்கும் தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்திருக்கின்றார்.

இந்த வகையில் இவற்றிற்காக உறுதுணையாக நின்றவர்களை இத்துறை சார்ந்து சாதித்த பல விடயங்களை பயணித்த பெறுமதிமிக்க தடயங்களை நினைவுகூர்ந்து ஓர் ஆவணப்படுத்தல் மேற்கொண்டிருக்கின்றார்

அவரது எண்ணங்கள் இன்னும்  சீருடனும் சிறப்புடனும்  ஈடேறுவதுடன் அவையனைத்தும் ஒரு சிறப்பான படிக்கற்களாக நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு அமைந்திட வேண்டுமெனவும் ;அதேபோல் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளவிருக்கின்ற அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறவும் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவைக் குடும்பம் சார்பாக மனதார வாழ்த்தி நிற்கின்றோம்

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை
WTBF