உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் கனடா கிளையின் ஊடாக கனடா வாழ் ராமகிருஷ்ணன் ஜனார்த்தனன் அவர்கள் தனது மகன் செல்வன் சிறீராம் ஜனார்த்தனனின் பிறந்த நாளை முன்னிட்டு பிள்ளையின் விருப்பத்திற்கும் மதிப்பளித்து  மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆற்றல்கள் இருந்தும் தம்மாற்றல்களை  வெளிக்கொணர முடியாதிருக்கும் வறிய சூழ்நிலையில் காணப்படுகின்ற ஒரு தொகுதி இளம் சிறார்களிற்கு பட்மின்டன் உபகரணங்களை வழங்கியுதவியிருந்தார் .
இதனை உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் கனடாக்கிளையினர் நெறிப்படுத்த WTBF இன் இலங்கைக்கிளை மற்றும் மன்னார் மாவட்ட பட்மின்டன் சங்கம் என்பன ஒருங்கிணைத்தியிருந்தார்கள்.
இவ்வகையில் திரு ராமகிருஷ்ணன் ஜனார்த்தனன் அவர்களது இச்செயற்பாட்டை மனமுவந்து பாராட்டுவதுடன் இதனை ஒரு முன்னுதாரணமாக பின்பற்றி ஏனையோரும் இவ்வாறான வழிகளில்  இணைய வேண்டும் என உரிமையுடன் வேண்டுகின்றோம்.